Monday, August 13, 2007

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.: விவசாயி - என்னதான் தீர்வு?

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.: விவசாயி - என்னதான் தீர்வு?

நமக்கு தகவல் தொழில் நுட்பம் தெரிந்ததாலேயே தீர்வும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்திருக்க தேவையில்லையே?

Friday, August 10, 2007

சில நாள் இன்பமா அல்லது பல நாள் இன்பமா? முரண் 3

வேறு எந்த முரணை விடவும் இது நிச்சயம் அதிகம் விவாதிக்கப்படலாம்.

ஒரு நாள் அப்பாவும் பையனும் எம்ஜியார் படம் போனார்கள். படம் முடிவில் அப்பா மகனிடம் கேட்டார் 'யாரை போல நீ இருக்க ஆசை? எம்ஜியார் மாதிரியா?'. பையன் சொன்னான் ' எம்ஜியார் மாதிரி காலமெல்லாம் கஷ்டப்பட்ட பிறகு கடைசி காலத்தில மட்டும் சுகமாய் இருந்தா பிரயோசனமில்லே. நம்பியார் மாதிரி கடைசி காலத்தில கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை பூரா சுகமா இருக்குறதுதான் எனக்கு புடிச்சிருக்கு.'

சிரிப்பாக வந்தாலும், பெரும் பாலும் இப்படித்தான் போகுது பல பேரோட ஆசை. 'வரவு எட்டணா, செலவு பத்தணா', Instant Gratification, Consumerism என்கிறார்கள் பிடிக்காதவர்கள்.

உதாரணங்கள் - எப்பாடு பட்டாவது கடன் வாங்கி பெரிய காரோடு வலம் வருவது. (அதை நெரிசல் சாலைகளில் பயன்படுத்தி தானும் மற்றவரும் பெட்ரோல் குடி(த்து)க்க செய்து) பணம் வீணாக்குவது மட்டுமன்றி, புதிய பெருங் கார் வாங்க, பராமரிக்க மேலும் மேலும் செலவளிப்பது.

விவசாயிகள் மாட்டுப்புண்ணாக்குடன் யூரியா உரம் சேர்த்து கறவை மாட்டுக்கு கொடுப்பார்கள். அதிக பால் கொடுக்க வேண்டி. மாடு கொஞ்ச நாளுக்கு பால் அதிகம் கறந்து விட்டு பின்பு சத்திழந்து விடும். பயிர் மண்ணே அப்படி ஆகும் போது மாடு அப்படி ஆவதில் வியப்பென்ன?

இதே போல் நமது பயன் படுத்துவதில் எல்லை மீறிய குறுங்கால வசதிகள் (உதாரணத்துக்கு - போக்குவரத்து, குளிர்பதன வசதிகளுக்காக கட்டுக்கடங்கா உபயோகமாகும் மின்சாரம், கனிம எரிபொருட்கள் மூலமாக)நமக்கே நெடுங்கால ஊறு விளைவிப்பதற்கு ஓசோன் ஓட்டை, சுற்றுப்புற மாசு என கணக்கிலடங்கா உதாரணங்கள்.

நான் முதலில் சொன்னது போல இந்த முரணுக்கான காரணமும் தீர்வும் சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள படுவது சந்தேகமே. பல விஞ்ஞானிகளும் பொருளாதார வல்லுனர்களுமே இன்னும் இந்த முரணையே ஏற்றுக்கொள்ள வில்லை.