Monday, July 2, 2007

பலமே பலவீனம் - முரண் 2

இதுவும் நாம் பொதுவாக பார்க்கும் நிகழ்வுதான். மிகவும் நன்றாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். நல்ல சக்கை போடு போட்ட படி நல்ல பேருடன் நடந்த வண்ணமே திடீரென நின்று விடும். வணிக உலகில் மிக இயல்பானது இது. வெளியிலிருப்பவருக்கு ஏன் என்றே புரியாது. (உள்ளிருப்பவர் புரிந்து கொண்டதும் பெரும்பாலும் தவறாக). மேலும் ஒரு நிறுவனம் மட்டுமன்றி ஒரு பெரும் வணிகத்துறை (or industry)யே கூட படுத்த சரித்திரங்களும் நாம் பார்த்தனவே. (Web Commerce ஞாபகம் இருக்கா?).

முதலில் எல்லோருக்கும் கண்ணில் படுவது முதலாளி(களின்)யின் மெத்தனம், தாயாதி சண்டைகள் (அம்பானி சகோதரர் போல), பலமான சந்தை போட்டி முதலான M.B.A. மக்கள் தரும் Competitive Analysis போன்ற செத்த எலியடிக்கும் பகுப்பாய்வுகள். அதை வைத்துக் கொண்டு பங்கு சந்தை ஆய்வாளர்கள் செய்யும் மறு ஆய்வுகள்.

ஆனால் 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'. ஒரு பலமே பலவீனமாவதுதான் இதற்கு காரணம். யானை தன் தலையில் தானே மண்ணள்ளி போடுவது போல அல்ல இது.

முந்தைய பதிவை போல இதுவும் ஒரு முரண்தான். இயற்கையின் சமன் படுத்தும் விதிதான். அது மட்டுமன்றி இந்த விதியின் செயல்பாடு நாம் நேரடியாக செயலுக்கும் விளைவுக்கும் பொருத்திப் பார்க்கவும் முடியாதது வேறு நாம் இந்த முரணை புரிந்து கொள்ள தடை செய்கிறது.

சில உதாரணங்கள் முதலில்.

1. இந்தியா உலக வணிகத்தின் சக்கரவர்த்தியாக இருந்த காலத்தில் இந்த முரணின் வெளிப்பாடு - வணிகத்தால் வசதி பெற்ற அரசருக்கும் இல்லாதோருக்கும் இருந்த முரண், இந்தியாவை பார்த்து ஏங்கிய ஐரோப்பியரின் (கவனிக்க - இங்கும் ஒரு முரண், நாடுகளுக்கிடையே) தலையீட்டுடன் பெரிது பட்டு, நாம் அடிமைபட்டு இந்தியா உலக பொருளாதரத்தில் பாதாளம் போன கதை. அடிமையாக்கிய இங்கிலாந்து தற்போது அமெரிக்காவுக்கு அடிவருடுவது அடுத்த கதை.

2. சணல் தொழில், ரேடியோ மெக்கானிசம் படிப்பு, கப்பல் கப்பலாக வந்திறங்கிய பனிக்கட்டி - ஒரு காலம் கொடி கட்டி பறந்து இப்போது நாம் மறந்து போன பல தொழில்கள்.

3. இன்று ஆல் போல் தழைத்து வரும் கணினி துறையிலேயே பல - dBase, FoxPro, Lotus 1-2-3....

முன் கூறியபடி வெளிக்கிடையான பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையில் பலம், பலவீனமாவதே முக்கியம். எப்படியென்றால், எந்த ஒரு வெற்றிக்கும், அதனை முனைவோர் (ஒரு நாட்டினரோ அல்லது தொழில் முனைவோரோ எவராயினும்), தம் பலத்தை முழுமூச்சாக முயன்றால்தான் முடியும் (திண்ணியராக). அச்சமயம் வேறு எந்த எண்ணமும் இன்றி.

ஆனால் இங்கேதான் இயற்கை விளையாடுகிறது. இயற்கை (மனித இயற்கையும் சேர்த்துதான்), அவ்வளவு தூரம் எளிதாக கையாளும் வகையில் இல்லையே! அதனால் திண்ணியர் எண்ணியாங்கு (மட்டுமே) எண்ணியதை அடைந்தாலும், இந்த (முயலும்போது) எண்ணாமல் விட்ட காரணிகள் (factors), பலவீனத்தின் வித்தாகிறன. (பொருளாதார வல்லுனரகள் இதனை invisible factors என்றும், 'other things being equal' என்று நடைமுறையில் நடவா சால்ஜாப்புகள் சொல்லியும் இந்த முரணை மறக்கடித்து விடுவார்கள்).

இந்திய பொருளாதார வல்லுனரகள் இது நாள்வரை ஏற்றுமதிக்கு (ஏற்றுமதியாளருக்கு) என்னவெல்லாம் சலுகை கொடுத்து டாலர் வரத்துக்காக பாடுபட்டார்கள்? வரி, வட்டி, சுங்கம் என நாட்டு மக்கள் கொட்டி கொடுத்த (கொடுத்துக்கொண்டிருக்கும்) விலை எவ்வளவு? இப்போது டாலர் கொட்டிக் கிடக்க அதனால் வந்த வருமானக்குறைக்கும் அந்த ஏழை-ஏற்றுமதியாளருக்கு, மேலும் சலுகை கொடுக்க முயல்கிறார்கள். பலம், பலவீனமாவதற்கு இந்த உதாரணத்தை சிந்தித்தாலே போதும்.

என்ன செய்யலாம் இந்த முரணுக்கு?