Tuesday, March 24, 2009

புத்தகம் அறிமுகம் - நம்மாழ்வாரின்‘களை எடு'

புத்தகம் - நம்மாழ்வாரின்‘களை எடு'. புத்தகம் இங்கே கிடைக்கிறது.

இயற்கை வேளாண்மை பற்றிய நல்ல அறிமுக நூல். தமிழ்நாடு, இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கவனிக்கப்படும் இயற்கை வேளாண்மை முறைகளை அறிமுகப்படுத்துகிறது. நவீன வேளாண்மையின் குறைகளும் மரபு/இயற்கை வேளாண்மையின் அவசியமும். பல கட்டுரைகளின், நேர்காணல்களின் தொகுப்பாக.

இயற்கை வேளாண்மை என்றால் ஏதோ அதிக விளைச்சலை பற்றி கவலைப்படாத விவசாயம் என்று நினைப்போருக்கும், மரபு வழி வேளாண்மை என்றால் அஞ்ஞான முறை விவசாயம் என்று நினைப்போருக்கும், ஆசிரியர் நன்றாக பதில் கொடுக்கிறார்.. இல்லை இல்லை அந்த மாதிரி எண்ணங்களுக்கு ஆணி வேரையே அசைக்கிறார்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் மட்டுமே விவசாய பொருளாதார நாடுகள் என்ற (பாடபுத்தக) அறிவிலிருந்து நான் மிக சமீபமாகவே 'சுழன்றும் ஏர் பின்னதுதான் உலகம், இன்னும் வள்ளுவர் சொல்லுக்கு மாற்றமில்லை' என்ற
தெளிதலுக்கு சமீபத்தில்தான் வந்தேன். வேளாண்மை சார்ந்தது இந்திய பொருளாதாரம் மட்டுமல்ல எல்லா உலக நாட்டு பொருளாதாரங்களும்தான். ‘How the Other Half Dies‘ போன்ற நூற்களின் ஒரு பரிமாணத்தை நம்மாழ்வாரிடம்
காண முடிகிறது.

பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு தனியான துறையாச்சே. தனி நூலே தேவைப்படும்.

பசுமை புரட்சியின் ‘மகத்து'வத்தை பாட/துணைப்பாட நூல்களில் படித்துவந்த அறிவுக்கு(!) மகத்தான சவால். முதல் இரண்டு அத்தியாயங்களும் பசுமை புரட்சியின் ஏமாற்றங்களையும் தற்போதய வேளாண் நெருக்கடியையும் அலசுகின்றன.

பின்னர் வரும் அத்தியாயங்களில் வட/பிற நாட்டு மரபு வழி வேளாண் வழிகாட்டுதல்களும் அறிமுகம். மஹாராஷ்டிரம், ஜப்பான், கியூபா என இயற்கை விவசாயத்தை மேற்கொண்ட பல இடங்களில் முன்னோடி விவசாயிகளின் உதாரணங்களை சுட்டும் ஆசிரியர், தமிழ் பாரம்பரிய விவசாய மூலங்களையும் சுட்டுகிறார்.

மரபணு மாற்ற விவசாயம் பற்றிய கண்ணோட்டங்கள்தான் சிறிது பிரச்சார நெடியடிக்கின்றன, (ஒருவேளை சொன்னவற்றையே திரும்ப திரும்ப சொல்வதாலேயேவா? ஆசிரியரின் பல கட்டுரைகளை தொகுத்ததால் நேர்ந்தா இது?). ஆனால் அவர் இது பற்றி கேட்கும் பல கேள்விகட்கும் விடை கிடைக்காத நிலையில் நம்மாழ்வாரின் நிலை புரிந்து கொள்ள முடிகிறது.

தனி கட்டுரைகளின் நூல் வடிவம் எனும்போது சில நெருடல்கள் - ஏற்கனவே சொன்ன கருத்துகள், உதாரணங்கள் மீண்டும் வருவது ஒரு உதாரணம்.

தனி நூலாக (உ.ம். Rachel Carsonனின் 'A Silent Spring') எழுதினாலேயே அதன் தாக்கமும் அழகுமே தனிதான். மேலும் பல நூற்களை நம்மாழ்வாரிடம் எதிர்பார்க்கிறேன்.

இயற்கைவழி வேளாண்மை செய்முறை பற்றியும்தான்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in